கோவை நகைக்கடை திருட்டுவழக்கில்கைது செய்யப்பட்ட கொள்ளையன்விஜய் கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்.மத்திய சிறையில் அடைப்பு.

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, செந்தில்குமார், ராஜேஷ்,மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் உள்பட 48 பேர்இடம் பெற்றிருந்தனர்.இவர்கள் தீவிரமாக துலக்கிகொள்ளையன் யார் ?என்பதை அடையாளம் கண்டனர்.ஆனைமலையில்பிடிக்க முயன்றபோதுவீட்டில் ஓட்டை பிரித்து வெளியே குதித்து கொள்ளையன்விஜய் தப்பி சென்று விட்டான்.அவரது மனைவி நர்மதா விடம்கொடுத்து வைத்திருந்த 3 கிலோ தங்க -வைர நகைகள் மீட்கப்பட்டது.மேலும் அவரது மாமியார் யோக ராணி தர்மபுரியில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 35 கிராம்தங்க வைர நகைகளை போலீசார் மீட்டனர்.தலை மறைவாக உள்ள கொள்ளையன் அஜய்யை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்..இன்னும் 235 கிராம் நகைகள் மற்றும் மீட்கப்பட வேண்டியது உள்ளது.இந்த நிலையில் கொள்ளையன் விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து நேற்று அதிகாலையில் தனிப்படை போலீசார் அவன் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர் .அப்போது அவன் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றான். போலீசார் அவனைமின்னல் வேகத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.அவனை போலீசார் கோவைக்கு அழைத்து வந்தார்கள்.இவன் உறவினர் வீட்டில் கொடுத்து வைத்திருந்த 42 கிராம் தங்க நகைகள், (2செயின் ,ஒரு மோதிரம்) பணம் ரூ 20 ஆயிரம் மீட்கப்பட்டது.மொத்தம் 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.கொள்ளையன் அஜய் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர்என்பதால் நன்றாக ஓடக்கூடிய தாண்டக்கூடிய அனுபவம் உள்ளவர்.மேலும் அவரது குறிக்கோள் பணம் கொள்ளை அடித்து ராஜ வாழ்க்கை வாழ வேண்டும்.என்ற எண்ணம் தான் அந்த அடிப்படையில் தான் கோவைக்கு வந்து செல்போன் கடைகளில் பணம் கொள்ளையடிக்கலாம் என்று எண்ணத்தில் வந்துள்ளார்.திடீரென்று மனம் மாறி நகை கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார் நகைக்கடையிலும் முதலில் பணத்தை தான் தேடி உள்ளார். பணம் கிடைக்காததால் தான் நகைகளை திருடியதாக கூறினார்.நகைக் கடை ஊழியர்களுக்கும், கொள்ளையன் விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது..இதற்கு முன் 2 செல்போன் திருடியதாகவும் ,ஒரு பைக் திருடியதாகவும், ஆர். எஸ் .புரத்தில் ஒரு டாக்டர் வீட்டில் ரூ17 ஆயிரம் திருடியதாகவும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கடந்த மாதம் 18ஆம் தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.27-ம் தேதி இந்த திருட்டை நடத்தியுள்ளார்.விஜயை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக துப்புதுலக்கி கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை உதவி கமிஷனர் கணேஷ்,,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார்,செந்தில்குமார் மீனாம்பிகை |ராஜேஷ் உள்ளிட்ட 48 பேரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பாராட்டினார்.இவ்வாறு அவர் கூறினார்.