மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி…

பள்ளபாளையம் பேரூராட்சி காந்தி நகர் கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் P.S. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கபிலன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அசோக், குணசேகரன், முத்துலட்சுமி சரவணன், மனோகரன், மற்றும் அப்பகுதி திமுக அவைத்தலைவர் சின்னகண்ணு, செயலாளர்கள் சௌந்தர வடிவு, கார்த்தி, சுந்தரம், மணி, ஜனகராஜ், வெங்கடேஷ், சண்முகம், நடராஜ், ரங்கசாமி, ராமலிங்கம், குழந்தைவேல் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.