செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் கோவை கல்லூரி மாணவி மாயம்..!

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் ,80 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி .இவரது மகள் ஆனந்தி (வயது 23) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம் .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி நேற்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..