தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் நெகமம், செங்குட்டு பாளையம் அருகே உள்ள முட்டம் பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் மோகன்தாஸ் ( வயது 17 )இவர் நேற்று கோவை டபொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோதவாடி பிரிவு அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து தந்தை வீரமுத்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..