இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனப் பேசியது விவாதமானது. ...

கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் ...

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்து பேசிய அமித் ஷா, “ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் ...

சென்னை: கோடை வெப்பத்தால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்டல் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் ...

மும்பையில் பரவியதாக கூறப்படும் புதிய வகை “எக்ஸ் இ” கொரோனா தமிழகத்தில் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான “எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. ...

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.இச்சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அப்போது, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்து புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து, ...

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ரூ.70 கோடி செலவில் 389 மருத்துவ வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார் . நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், ...

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலைமைச்சர் ஸ்டாலின்  விளக்கம் அளித்து வந்தார்.அப்போது முதல்வர் கூறுகையில்: “மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய ...

நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ந் தேதி நிறைவடைகிறது. இதனால் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலானது எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களின் மறைமுக வாக்குகள் மூலம் நடைபெறும். தற்போதைய நிலையில் லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை 233. ராஜ்யசபா எம்.பிக்கள் எண்ணிக்கை 543. அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச ...

புதுடில்லி: அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியலை எதிர்த்து பா.ஜ., போராடும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பாஜ அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரே தேசம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை மாற்ற முடியாது என்ற ...