சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ...
நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைவது உறுதி என்றும், அமமுகவிற்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து ...
புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு மாநில அதிமுக துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ, வையாபுரி மணிகண்டன் தலைமையில் நடந்தது புதுச்சேரி : புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...
கோவை: ஆவின் பால் பாக்கெட்டின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி கோவையில் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை டிரம்ப் ...
சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி, குண்டுராவ் ஆகியோரை நாங்குநேரி ...
இந்தோனேசியா: வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும்… டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க உள்ள இந்தியா வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் ...
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளன. சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்ட கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை ...
இந்தோனேசியாவில் நடந்துவரும் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேசினார். இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நுசா துவா எனும் தீவு ஹோட்டலில் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த நட்சத்திரஹோட்டலில் உலகத் தலைவர்கள் இன்று முதல் கூடி பல்வேறு அம்சங்கள், ...
கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது.. வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது. இதற்காக அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுக்கின்றனர். எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் ...













