நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, தொழிற்சாலைகள் என பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன அந்த வகையில் கடலூரில் செயல்பட்டு வரும் என்.எல்.சி.நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு கடந்த சில வருடங்களுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டன. அவற்றை சீர்செய்யும் முயற்சியில் என்.எல்.சி தற்போது இறங்கியுள்ளது. இதற்கு சுற்று வட்டார கிராமப்புற மக்கள் ...

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மாற்றத்திற்கான ஒப்பந்தமாகும். இது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பாநீஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அமைப்பின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பெரும் அளவிலான ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் ...

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ...

நாடாளுமன்றத்தில் விவாதம், கேள்வி பதில், அமளி, வெளிநடப்பு என பரபரப்பான சூழலில் மாறாக அலுவல் நடவடிக்கையின் போது புரோபோசல் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் காதலியான சக எம்.பி.யை, திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி ...

ஆன்லைன் சூதாட்ட மசோதா திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை கவர்னர் வெளியிட வேண்டும் என்றும் அந்த காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் குறித்து இன்றைய ...

தமிழ்நாட்டில் 10 மாவட்ட அலுவலகங்களை திறக்கும் நிகழ்ச்சிகளில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்க இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, அதிமுக-பாஜக இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. மேலும், தன்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு பாஜக ...

கோவை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பல்லாயிரகணக்கான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை முடித்து கொண்டு ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடு முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த் அதிமுக அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது. பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் ...

கோவை : கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மைக் முன்பு இருந்த தனது படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்த்து அகற்றிவிட்டு மேடையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையில் பாஜக சார்பில் மகளிர் தின விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா மேடையில் ஏறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போடியத்தில் ...

ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ...