கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்-2 தேதி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் ...

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி ரெயில்களில் பட்டாசுகள், வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்கள் போன்றவற்றை பயணிகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 4 நாட்கள் ...

கோவை: மதுரை, கண்ணூா், ஷொரனூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரெயில்கள் நாளை ( 20-ந் தேதி) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை, கண்ணூா், சொரனூரில் இருந்து ...

கோவை மாநகரில் ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் என பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி படித்து வருகின்றனர். கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியான என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ...

பெங்களூருவிலிருந்து மும்பைக்கு வெறும் 5 மணி நேரத்தில் கடந்து செல்லும் பசுமை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். நாம் எல்லோரும் வெளிநாடுகளில் சாலைகள் தரமாக இருக்கிறது, இந்தியாவில் தான் மோசமாக இருக்கிறது என்று எல்லாம் பேசிக்கொண்டிருப்போம். இந்தியாவில் தரமான சாலைகளை ஏற்படுத்த ...

கோவை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, உலக உணவு தினமான அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பனியாற்றி வரும் 45 ஆசிரியர்கள் CAS (Career Advancement Scheme) திட்டம் மூலம் பதவி உயர்விற்கு நேர்கானலில் கலந்துகொண்டு, பதவி உயர்வு முடிவுகள் எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் உத்தரவுகள் வழங்காமல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது. UGC 11-வது திட்ட காலத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்து, 12-வது திட்ட காலத்தில் ...

கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லவார்கள். 3 லட்சம் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்ப ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் இருப்பு ...

டெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட்டி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவின் உச்ச அதிகாரம் கொண்ட நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ...

மத்திய அரசு புதிய டோல்கேட் கட்டண கொள்கையை வரையறை செய்து வருகிறது. அதன்படி டோல்கேட்களில் தற்போது உள்ளதை விட டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் தானியங்கி முறையில் இந்த ...