கோவையில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சமீரன் ஆய்வு..!

கோவையில் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

தீபாவளி பண்டிகை நெருங்க உள்ளதை தொடர்ந்து மக்கள் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் ஊர்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்தும், காந்திபுரம் உக்கடம் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் அதிகளவு பேருந்துகள் இயக்கப்படும், அதே சமயம் கொடிசியா மைதானத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, தற்போது மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.