நீதிபதிகள் குறித்து ஆதாரம் இல்லாமல் நேர்காணல் செய்யும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை : டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

டிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று அமர்வுக்கு வந்தது. அப்போது அரசியலமைப்பு பிரதிநிதிகள்,நீதிபதிகள் மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவாக மற்றும் அவதூறாக கருத்துக்களை வெளியிடும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மலிவான விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை களை எடுக்க வேண்டும். சமூக அச்சுறுத்தலை பயன்படுத்த சமூக ஒழுக்கம் மட்டும் நல்லிணக்கத்தை பராமரிக்க அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இதுதான்.இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முத்தரவிட்டுள்ளது.