கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்கு செல்வோா், கல்லூரி மாணவ-மாணவிக்கு வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் ...

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சலுகை அளிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, தேசிய நெடுஞ்சாலை ...

மும்பை: இந்தியாவின் பெரும் பணக்கார பெண்களில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.கோட்டக் வங்கியும், ஹூருன் நிறுவனமும் இணைந்து, 2021ம் ஆண்டின் இந்தியாவின், 100 பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஷிவ் நாடார் துவக்கிய எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர், ரோஷினி நாடார், இந்தியாவின் பெரும் பணக்கார ...

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை அமாலக்கப்பிரிவு ரெய்டு 112 ஆக இருந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்து, 3,010 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி அமலாக்கப்பிரிவு ரெய்டு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.அதில் ” அமலாக்கப்பிரிவு ரெய்டு கடந்த 2014ம் ...

கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கபட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து செல்போன்களை தவறவிட்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ...

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையில் சீதோஷன நிலைக்கு ஏற்ப சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இது 60 நா பயிராக உள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் அதிக ...

மது போதையில் இருந்த ஓட்டுநரை சட்டையை கிழித்து அடித்து விரட்டிய லாரி உரிமையாளர் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல், மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து ...

அப்பார்ட்மெண்ட்டில் அழகிகள் இருப்பதாக கூறி பணம் மோசடி: சிறுவன் உட்பட இருவர் கைது கோவை சவுரிபாளையத்தில் தனியார் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு உள்ளது. இங்கு காவலாளியிடம், சில வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டனர். அதை பார்த்த காவலாளி, அது போல் யாரும் இங்கு குடியிருக்க ...

டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளை செயல்படுத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்கக் கூடியது. டெல்லியில் காவிரி ஆணையத்தின் 16-வது ...

பத்திரிகையாளர் நல நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ...