கோவையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் நியமனம்- கமிஷனர் பிரதாப் பேட்டி..!

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் மழைநீர் அதிகம் தேங்க
கூடிய கிக்கானி பள்ளி சாலை, லங்கா கார்னர், மணியகாரன்பாளையம் சாலை,
அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் ஆகிய 5 இடங்களில் புதிதாக கான்கிரீட்
மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உதவி கமிஷ னர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய் வாளர், தூய்மை பணியாளர், ஒட்டுநர் ஆகியோரை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. லங்கா கார்னர் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப் பட உள்ளது.

டைடில் பார்க் முதல் தண்ணீர் பந்தல் சாலை வரை தார் சாலை அமைக்கும்
பணிகள் நடைபெற்று வருகிறது. சுந்தராபுரம் முதல் மதுக்கரை மார்க்கெட் வரை
செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற பின்னர் தார் சாலை
அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை பொருத்தவரை மாநகராட்சியின் பழைய 60 வார்டுகளிலும் பாதாளசாக் கடை இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.மாநகராட்சியில் உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய
3 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல் பாட்டில் உள்ளன.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக் கடை இணைப்பு
குழாய் பதிக்கும் பணிகள் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. விடுபட்ட
இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க
நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 32 நுண்ணுயிர் உரம்
தயாரிக்கும் மையங்களில் தற்போது 6 மையங்கள் நல்ல நிலை யில் இயங்கி
வருகின்றன. மீதமுள்ள மையங்களில் அவற்றின் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகள்
மேற்கொள்ளப்பட்டு, செயல் பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் நமது மாநகராட்சிக்கு ரூ.70 கோடி
நிதி வரப் பெற்றுள்ளது. அதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்
கிடைக்கப்பெற்ற ரூ.5 கோடி நிதியில் பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மேற்
கொள்ளவும், பூங்காக்கள் சீரமைப்பு போன்ற பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.