கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ராஜேஸ்வரி( வயது 36.)இவரிடம் மர்க்கா சிங் என்பவர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை ராஜேஸ்வரி நம்பினார்.இந்த நிலையில் மர்க்கஸ் சிங்தனது தாயின் மருத்துவச் செலவுக்கு ரூ 10லட்சம் வேண்டும் என்று கேட்டார்.அதை ராஜேஸ்வரி ...
கோவையில் திருப்பூரை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரிடம் புதையல் தங்கம் என போலியான தங்கம் கொடுத்து 5 இலட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மண்ணாரி பகுதியில் உள்ள பசும்பொன் தேவர் வீதியை சேர்ந்தவர் பாலு. 45 வயதான இவர், மண்ணாரி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ...
கோவை பீளமேடு பக்கமுள்ள சேரன் மாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சசிலாராணி (வயது 56)அங்கு இவருக்கு சொந்தமான 5வீடுகள் உள்ளது.அதில் 3 வீடுகளை சக்திவேல் என்பவருக்கு வாடகை கொடுத்துள்ளார்.அதில் அவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார் . கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 14- 6- ...
கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்குஅதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் ...
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினர் தொடர்பான 127 இடங்களில் வருமானவ வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் தொடர்ச்சியாக சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி வருகின்றனர். பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான ...
கோவை மாவட்டத்தில் கடந்த 28 ந் தேதி காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆனநிலையிலும், உடைந்த, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பால் டப்புகளிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் ...
கோவை பெரியதடாகம் பிரிவு ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார். அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு கோழிப்பண்ணையில் வசித்து வந்த எலக்ட்ரிசீயன் காளிமுத்து (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...













