கோவையில் 9 வயது சிறுமியிடம் நைசாக பேசி கடத்தி சென்று பாலியல் தொல்லை- போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 45) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் அதே பகுதி சேர்ந்த 9 வயது சிறுமியிடம் நைசாக பேசிவிட்டு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமியின் சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார் .இதனால் அதிர்ச்சி அடைந்தசிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளீர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் ராஜேஷ் கண்ணன் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.