கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்- ஓய்வு பெற ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் நடவடிக்கை..!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பயிற்சி பள்ளி முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி செய்முறை தேர்வுக்கு மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக மாணவிகள் மருத்துவக் கல்லூரி இயக்குனர்கத்துக்கு புகார் அனுப்பினர் .அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. இதில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என்பது தெரிய வந்தது .இதையடுத்து கடந்த 29ஆம் தேதி முதல் அவரை பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்) செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி நேற்று முன் தினம் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலாகூறியதாவது:- மாணவிகள் அளித்த புகார் பெயரில் மருத்துவக் கல்வி இயக்குனரகம் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.