கோவை சரவணம்பட்டிசிவானந்தபுரம் அரிசி கடைபஜாரில் அரிசி கடை நடத்தி இருப்பவர் ஜெபஸ்டின் ராஜேஷ் ( வயது 36) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த37 கிலோ அரிசி பணம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் . ...
கோவை சுந்தராபுரம் எஸ்.பி. டவர்சில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவர் நடராஜன் (வயது 67) இவரிடம் டி .பி .கே .நலம் விரும்பி அவரது மனைவி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு சென்றனர். தங்களுக்கு முதலமைச்சர் ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கி தரமுடியும் என்று கூறினார்கள் . இதை நம்பி நடராஜன் தனது மகனுக்கும் ...
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பிரபலமான ஜூவல்லரி உள்ளது. இங்கு நேற்று நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது சுமார் 3 கிராம் எடையிலான ரூ.12 ஆயிரம் மதிப்பிலான தங்க கம்மல் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். ...
கோவை வெள்ளலூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம்(62). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று பள்ளியில் படிக்கும் தனது பேரனை அழைத்து வர சென்றார். அப்போது அவர் வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் இளம்பெண்களை கேலி, கிண்டல் செய்து ...
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் 4 ஆண்டிற்கு முன் கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 230க்கும் மேற்பட்டவர்களிடம் ...
கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையுள்ள அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் வருமானத்திற்கும் அதிகமாக ஏராளமான சொத்துக்கள் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் காமராஜ், இவரது மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ...
தமிழகத்தையே அதிரவைத்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, தற்போது மீண்டும் ஒரு திருப்பத்தை சந்தித்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் ...
கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சி பொறுப்பில் வந்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ...
தவறான சிகிச்சையால் பார்வையிழந்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் அர்ஜுனன். 2002-ல் 2-ம் வகுப்பு படித்தபோது, தளவாய்புரத்தில் மதுரை தனியார் கண் மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாமில் கலந்துகொண்டார். அவருக்குப் பார்வைக் குறைபாடு ...
கோவை அருகே உள்ள காரமடை மருதூர் ஊராட்சியில் அ.தி.மு.க கவுன்சிலராக உள்ளவர் சரவணன் (வயது 37). இவர் காரமடையில் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கவுன்சிலர் சரவணன் தனது காரில் காரமடை குந்தா காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 3 ...