கோவை குறிச்சியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்ற அதிகாரி சுற்றி வளைப்பு – 500 பேர் மீது போலீசார் வழக்குபதிவு..!

கோவை அருகே உள்ள குறிச்சியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு அருகே உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கோவை டாடாபாத்தில் உள்ள அவுசிங் டிவிஷன், நிர்வாக அதிகாரி,எட்வின் சுந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர்.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது இந்த நிலையில் நிர்வாக அதிகாரி சுந்தர் சிங்கை ,வரசித்தி விநாயகர் கோவில் நிர்வாகி சந்திரசேகரன் உட்பட 500 பேர் சுற்றி வளைத்து பணி செய்யவிடாது தடுத்தனர்.இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சந்திரசேகரன் உட்பட 500 மீது அரசு ஊழியரை பணி செய்யக்கூடாது தடுத்தல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.