எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : 7 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் கைது

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : 7 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சூழலில், எஸ்.பி.வேஎலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த 7 எம்.எல்.ஏ,.க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்களை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்தனர்.

கோவையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் வடவள்ளி பகுதியிலுள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

எற்கனவே இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியும் ஆவணங்கள் கைப்பற்றப்படாத நிலையில், மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்கு வீட்டின் முன்பு கூடியிருந்த கோவை மாவட்ட 7 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர்ஜெயராமன், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உட்பட 100 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

கைது செய்யும் போது போலீஸாருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நிலவியது.