மூதாட்டி கொலை வழக்கில் துப்பு துலங்கியது- பாலக்காடு விரைந்த தனிப்படை போலீசார்..!

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் அருகில் துர்நாற்றம் வீசியது.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்.அந்த பெண்ணை யாரோகட்டிப்போட்டு, செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கொலை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது .மூதாட்டி தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது. சமையல்காரர் உட்பட 2 பேர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,மூதாட்டி கொலையில் முக்கிய தடையம் சிக்கியது .இதன் மூலம் துப்பு துவங்கி உள்ளது.கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். என்று கூறினார்கள்.