கோவை: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் உம்மர் (வயது49) கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த மற்றொரு கேரள பஸ் டிரைவர் முஜிபுர் ரகுமான் ( வயது 48)அந்த பஸ்சை நகர்த்துமாறு ...

தமிழகத்தில் மது பிரச்சினை என்றைக்குமே தீராது என்ற நிலையில் உள்ளது. அதேபோல், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மதுபானம் கடத்தி வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கிடைக்காத மதுபானங்கள் மற்றும் குறைந்த விலைக்கு மதுபானங்களை வாங்கி இங்கு அதிக லாபம் பார்த்து வருகின்றனர். இந்த கடத்தலை தடுக்க இருமாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ...

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில்இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது ...

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். மற்றொரு படகில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். ...

கோவை உக்கடத்தில் கோவை மாநகர சாக்கு வியாபாரிகள் சங்கம் உள்ளது..இந்த சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக சங்க உறுப்பினர்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி கும்பலாக சங்கத்துக்குள் புகுந்து அங்கிருந்த செக் புத்தகம்,உள்ளிட்ட தஸ்தாவேஜ்களை எடுத்துச் சென்று விட்டதாகவும், அங்கிருந்தவர்களை மிரட்டி,சங்ககதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதாகவும் ...

கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ‘வெள்ளிவயலை சேர்ந்த கார்த்தி ( வயது 27) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...

கோவை கணபதியை சேர்ந்தவர் டெனிசன் ( வயது 45) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஜூசர்சைபுதீன் ( வயது 69)) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் டெனிசனிடம் தான் பீளமேட்டில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும் இதில் முதலீடு செய்தால் மாதம் 13 சதவீதம் வட்டி தருவதாகவும் ...

கோவை ஆர். எஸ். புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன் என்பவர் மனைவி அபிநயா. பிரபல பால்பண்ணை உரிமையாளரான அபிநயாவிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ...

கோவை அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிங்காரம். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார் .அப்போது ஒரு டெலிகிராம் ஐ.டி. மூலம் வந்த ஒரு லிங்கில் தொடர்பு கொண்டார். அதில் சில போட்டிகளில் கலந்து கொண்டு சிறிய தொகையை சிங்காரம் பெற்றார். இதனால் ஆசை அடைந்த சிங்காரம் மேலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார் .மொத்தம் ...

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரி பெண்கள் விடுதியில் உள்ள ஒரு அறையில் யாரோ புகுந்து செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்து காவலாளி செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் பைசல் (வயது 20) என்பவரை ...