மாணவிகள் தங்கும் விடுதியில் புகுந்து திருட்டு – வடமாநில வாலிபர் கைது..!

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரி பெண்கள் விடுதியில் உள்ள ஒரு அறையில் யாரோ புகுந்து செல்போனை திருடி சென்று விட்டனர். இது குறித்து காவலாளி செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமத் பைசல் (வயது 20) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டது..