நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் உணவகத்தில், 14 வயது சிறுமி கலையரசி கடந்த 16-ஆம் தேதி அன்று ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதை அடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை ...

கோழிக்கோடு, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆட்கொல்லியான ‘நிபா வைரஸ்’ பரவல் மீண்டும் திடீரென ஏற்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலியான நிலையில், பாதிப்பு எண் ணிக்கை 6 ஆக உயர்ந்தது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களின் எண்ணிக்கை 1,080 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் நோய் ...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தினை முன்னிட்டு ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஓசோனை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. ஓசோன் பாதுகாப்பு தொடர்பான ஓவியப் போட்டி பள்ளி ...

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புத்தமத அமைப்பான நிப்போன்சான் மயோகோஜி என்ற அமைப்பும் இணைந்து அமைதி மற்றும் அகிம்சைக்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-ஆவது பிறந்த நாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை புத்த மத ...

84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை (செப்.15) வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான ...

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டு பாஜகவை வளர்க்க மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். இந்தப் பயணத்தின்போது மக்களிடம் குறைகளை கேட்கும் அவர், இதற்கெல்லாம் இப்போதும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களே காரணம், பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டுவேன் என கூறி வருகிறார். கட்சி வளர்ச்சிக்காக மக்களிடம் ...

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது வெளியில் காணப்படவில்லை. இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இமானுவேல்  வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள் காட்டி, “சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபுவை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் ...

தஞ்சாவூர், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்! தஞ்சாவூரில் நடைபெற்ற இரட்டைமலை சீனிவாசன் 78 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!*நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்களின் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வர்ணாசிரம,மனுதர்ம ஆண்டான் -அடிமை முறைகளை எதிர்த்து போராடிய ...

தஞ்சையில் 3 நாட்கள் நடைப்பெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கேரம் கழகம் மாநிலத் தலைவரும். தஞ்சை மேயருமான சண். இராமநான் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். தஞ்சை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் தமிழ்நாடு மாநில கேரம் கழகம் சார்பில் மாநில அளவிலான ...

ரூ.34 ஆயிரத்துக்கு காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக திருமண மண்டபங்கள், வீடுகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை வாடகைக்கு கொடுத்து பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் சற்று வித்தியாசமாக, காவல்நிலையத்தை வாடகைக்கு விட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது அம்மாநிலக் காவல்துறை. ரூ.34 ஆயிரத்தை செலுத்தினால் காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் ...