நாமக்கல்லில் சோகம்… ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு..

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் உணவகத்தில், 14 வயது சிறுமி கலையரசி கடந்த 16-ஆம் தேதி அன்று ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதை அடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை கலையரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதே உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 20 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.