நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி டிரைவர் பரிதாப பலி..

கோவை போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) வேன் டிரைவர். நேற்று இவர் வாளையார்- பாலக்காடு ரோட்டில் வேன் ஓட்டிக் கொண்டு சென்றார்.அங்குள்ள ஏசிசி அப்பர் பாலம் அருகே சென்றபோது ரோட்டில் எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது இவரது வேன் மோதியது. இதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார்.  சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சசிகலா கே. ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வைரம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக திருச்சூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சகாபுதீன் (வயது 40)என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..