இராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சிய CM விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அப்போது முதலமைச்சர் விஜய் இராணுவ வீரரின் குழந்தையை கையில் வாங்கி மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.