கோவை டாஸ்மாக் அருகே பைக்கில் வந்த என்ஜினியரை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறிப்பு..!

கோவை ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ் .லேஅவுட் செய்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . நேற்று இரவில் இவர் வேலை முடிந்து பட்டணம் ரோடு, நெசவாளர் காலனி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்தது .பின்னர் இவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்க செயின், பணம் ரூ 1500, செல்போன் ஆகியவற்றை பறித்தது .பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்று விட்டனர். இது குறித்து வீரமணி சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் . இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்.