தஞ்சையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்து டானிக் குப்பையில் கொட்டப்படும் அவலம் .!

தஞ்சையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்க கூடிய அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக 8ம் மாதம் காலாவதியான ஆயிரம்  பாட்டில்கள் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளன.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  நோயாளிகளுக்கு வழங்குவதற்காக விநியோகித்த அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக் பாட்டில்கள் ஆயிரம் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்த டானிக் ஊட்டசத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்து அதிகமாக இருப்பு இருந்தால் அதனை அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை மருந்து கிடங்குக்கு தகவல் சொல்ல வேண்டும் காலாவதி ஆகும் வரை வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தல் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அயர்ன் அன்ட போலிக் ஆசிட் சிரப் ஐ.பி டானிக் 8ம் மாதம் காலாவதி உள்ளது. இதனை குப்பை கிடங்கில் கொட்டியது யார். காலவதி ஆகும் வரை நோயாளிகளுக்கு வழங்காமல் ஏன் வைத்து இருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது..