கோவை வாளையார் அணையில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி..

கோவை வாளையார் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி படித்து வந்த மாணவர்கள் 8 பேர் நேற்று அங்குள்ள வாளையார் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது சண்முகம், திருப்பதி என்ற இரு மாணவர்களும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தண்ணீரில் தத்தளித்த மற்றொரு மாணவனை அப்பகுதி மக்கள் காப்பாற்றினார்கள். இவர்கள் இருவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வாளையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கல்லூரி மாணர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..