நள்ளிரவில் கோவை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்..!

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணி அளவில், தரைத்தளத்திலும் முதல் தரத்திலும் உள்ள அந்த கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது.பிறகு தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் தீ மள மளவென பரவியது .இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை தலைமையில் உதவி மாவட்ட அதிகாரிகள் அழகர்சாமி ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் 3 தீயணைப்பு என்ஜின்களுடன் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது. தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி இரண்டாவது மாடிக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர் .இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..