கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனி உருமையன் வீதியைச் சேர்ந்தவர் அமுதவதி(42). இவரது கணவர் சின்னச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அமுதவதி தன் மகள் சாருஹாசினி(20) வசித்து வந்தார். சாருஹாசினி பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அமுதவதி தினமும் அவிநாசியில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அமுதவதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது வீட்டிற்குள் சாருஹாசினி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கு காதல் தோல்வி ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.