கோவையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி,லெனின் நகரை சேர்ந்தவர் குணசேகரன் , இவரது மனைவிதீபா (வயது 27) இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .அவர்களுக்கு குழந்தை இல்லை ,கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகள் முன்பு அவரை விட்டு பிரிந்தார்.
இந்த நிலையில் குணசேகரன் என்பவரை ஒரு ஆண்டுக்கு முன் 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். குணசேகரன் ஏற்கனவே திருமணம் ஆனவர்.அவர் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தீபா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் ராதா கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.