கோவையில் லாரி மோதி கணவருடன் மொபட்டில் சென்ற பெண் பரிதாப பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு,வி கே கே நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரோஜா (வயது 52) இவர்கள் இருவரும் நேற்று கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ஏ ஆர் சி சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற மொபட் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் .ரோஜா அதே இடத்தில் பலியானார். இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் கணவர் கணேசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஆலந்துறை பக்கம் உள்ள தென்கரையை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் குமார் ( வயது 36)என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.