புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி..

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள நல்லட்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 46) கூலித் தொழிலாளி. நேற்று இவர் கோதவாடி பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 15 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இது குறித்து அவரது மனைவி துளசி மணி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.