என்னது!! மாமனார் இறந்த துக்கம் தாளாமல் மருமகன் விஷம் குடித்து தற்கொலை..

கோவை காரமடை புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி(30). கூலித்தொழிலாளி.

இவருக்கு திவ்யபாரதி(22) என்ற மனைவியும், 2½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திவ்யபாரதியின் தந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மூர்த்தி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், மாமனார் இறந்தது குறித்து தனது மனைவியிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மனைவியும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மூர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியான திவ்யபாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனார் இறந்த துக்கம் தாளாமல் மருமகன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.