கள்ளகாதலனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண் திடீர் தற்கொலை..!

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 34 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் டெயிலர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கிணத்துக்கடவில் வசித்து வந்தார். பின்னர் இளம்பெண் கோவையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அந்த ஜவுளிக்கடையில் வேலை பார்த்த திருமணமான வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

பின்னர் அந்த வாலிபர் தனது மனைவிக்கு தெரியாமல் இளம்பெண்ணுடன் கிணத்துக்கடவு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருமணம் செய்யாமல் அவருடன் கடந்த 4 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் வாலிபர் இளம்பெண்ணை சரியாக கவனிக்காமலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இளம்பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.