சமூக வலைத்தளத்தில் மதம் தொடர்பான கருத்துக்கள் பதிவேற்றம் – 2 பேர் மீது வழக்குபதிவு ..!

கோவை: ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை காயிதே மில்லத் நகரில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையின் போது மதம் தொடர்பான கருத்துக்களை குதுபா என்பவர் பேசினார். இதை அதே பகுதியை சேர்ந்த கோவை காதர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார் .இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த கோவை காதர், மற்றும் மதம் தொடர்பான கருத்துக்களை பேசிய குதுபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.