வீட்டை பூட்டாமல் மொட்டை மாடியில் தூங்கியவர் வீட்டில் நகை கொள்ளை..!

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணி ( வயது 42)கார் வாட்டர் வாஸ் – பெபிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவர்கள் நேற்று முன் தினம் இரவில் காற்றோட்டத்துக்காக வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டை பூட்ட மறந்து விட்டனர். இந்த நிலையில் யாரோ வீட்டில் புகுந்து அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகள், 3 செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து பாலசுப்பிரமணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்