அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் திருட்டு..!

கோவை ஆர். எஸ். புரம்,ராபர்ட் சன் ரோட்டில் உள்ள ஜி.வி.டி லேஅவுட்டை சேர்ந்தவர் சம்பத்குமார் .இவரது மனைவி சாந்தி (வயது 63 )இவர் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார் .பால் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது இவரது கழுத்தில் நடந்த 3 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர்.இது குறித்து சாந்தி வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்துள்ளார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.