சூலூர் அருகே ஒரே நாளில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பரிதாப பலி..

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் பிரபு.(வயது41) நேற்று இவர் அங்குள்ள ரங்கநாதபுரம்- கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்து டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செந்தில் பிரபு அதே இடத்தில் இறந்தார்.

இதே போல சூலூர் பக்கம் உள்ள சங்கோதி பாளையம் பகுதியை சேர்ந்த சிவபெருமாள் ( வயது 79) நேற்று இவர் கோவை- சேலம் சர்வீஸ் ரோட்டில் சங்கோதி பாளையம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் சிவபெருமாள் மீது மோதியது. இதில் அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம், நரசோதிப் பட்டியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (வயது 38 ) என்பவரை கைது செய்தார் .

இதே போல அன்னூர் கோவில்பாளையம் பக்கம் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் ராஜா முத்து ( வயது 33) நேற்று பொன்னே கவுண்டன் புதூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி கிழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் இது குறித்துஅன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.