படுக்கையில் பீடி தீ விழுந்து முதியவர் கருகி பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவு, டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 67) கூலிதொழிலாளி .இவர் படுக்கையில் படுத்து கொண்டே பீடி குடித்தாராம். பீடி படுக்கையில் விழுந்து தீப்பிடித்தது. . இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து இவரது மனைவி தெய்வானை துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..