கொலைக்கு சதித்திட்டம் – 4 பேர் கைது..!

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ,சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4பேரை பிடித்து விசாரணை செய்தனர் .அவர்கள் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.இதை யடுத்து 4பேரும் கைது செய்யப்பட்டனர்விசாரணையில் அவர்கள் செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த சதீஷ் (வயது 45 )சொக்கம்புதூர் ரோடு, கிருஷ்ணா நகரை சேர்ந்த சசிகுமார் ( வயது 34) சுண்டக்கா முத்தூர், சிவக்குமார் ( வயது 34) பி. என். புதூர், கோகுலம் காலனி வெங்கடேஷ் ( வயது 52) என்பது தெரியவந்தது.இவர்கள் வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.