கல்லூரி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் – வாலிபர் கைது.!!

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச். எஸ். காலனி, கருணாநிதி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் சரண்யா (வயது 22) இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார்கல்லூரியில்பி. இ.படித்து வருகிறார்.கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 1-ந் தேதி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அங்குள்ள ரோட்டில் நடந்து செல்லும்போது இவரை நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி மகன் ராகுல் குமார் ( வயது 27) தினேஷ் குமார் ஆகியோர் சேர்ந்து தாக்கி,கீழே பிடித்து தள்ளி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து சரண்யா சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராகுல் குமாரை நேற்று கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் |கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினேஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.