மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை வடவள்ளி பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70) இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமலிங்கம் சாணி பவுடர் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இது குறித்து அவரது மகன் கார்த்திக் குமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.