டாஸ்மாக் பாரில் பணம் திருட்டு- ஊழியர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை பீளமேடுஹோப் காலேஜ் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் நாகராஜன் ( வயது 42 ) இவரது பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் பாஸ்கரன.கடந்த 15 ஆம் தேதி பாரில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை, பின்னர் பணத்தை சரிபார்த்த போது ௹65 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .இந்த பணத்தை பார்த்து பார் ஊழியர் பாஸ்கரன் தான் திருடி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது .இது குறித்து பார் உரிமையாளர் நாகராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை தேடி வருகிறார்கள்.