ட்ரெய்லர் வாகனம் மரத்தில் மோதி வடமாநில வாலிபர் பரிதாப பலி..

கோவை டிச 3 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர பஸ்வான். இவரது மகன் ஆகாஷ் குமார் ( வயது 19 )இவர் நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டியில்நாகராஜ் என்பவருக்கு சொந்தமானதோட்டத்தில் தங்கியிருந்து கூறி வேலை செய்து வந்தார். நேற்று இவர் தோட்டத்தில் இருந்த பவர் ட்ரெய்லரை எடுத்து ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக மாமரத்தில் ட்ரெய்லர் மோதி ஆகாஷ் குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.