பல்லடத்தில் 4 பேர் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள் ..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு,குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) இவர் கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது 69) சித்தி ரத்தினம்மாள் (வயது 58 ) ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து ( வயது 24) மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவனை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் ஆயுதங்களை எடுத்து கொடுக்க அழைத்துச் சென்ற போது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது தவறி விழுந்து அவரது காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் ( வயது 27 ) தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தலாபுரத்தை சேர்ந்த வனராஜ் மகன் விஷால் என்ற சோனை முத்தையா (வயது 20) ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இவர்களை பிடிக்க போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி , டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கூடுதல் எஸ்.பி.பாலமுருகன், பல்லடம் டி.எஸ்,பி .சவுமியா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி மாவட்டங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருச்சி,மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர் . இந்த நிலையில் போலீசார் தேடிய வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய 2 பேரும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.. இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்பதர்களில் மறைத்து வைத்திருப்பதாக வெங்கடேஷ் தெரிவித்தார்..இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக நேற்று அதிகாலை 4-45 மணிக்கு பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா மற்றும் போலீசார் வெங்கடேசை ஒரு வேனில் பலத்த பாதுகாப்புடன் தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றனர் அங்கு சென்றதும் முட்புதர்களில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை அவர் போலீசாரிடம் எடுத்துக் கொடுத்தார். பின்னர் அவரை பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு வேனில் கொண்டு சென்றனர். தொட்டம்பட்டி காட்டுப் பகுதியில் செல்லும் போது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று வெங்கடேஷ் தெரிவித்தார். இதனால் போலீசார் வேனை நிறுத்தினர். பின்னர் வெங்கடேசன் பாதுகாப்புக்காக இரண்டு போலீசார் கூடவே சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வெங்கடேஷ் திடீரென போலீசாரின் கண்களின் மண்ணை தூவி விட்டு தப்பிச் சென்றார் .இதனைக் கண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா துப்பாக்கியை எடுத்து அவரை எச்சரித்தார். அதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து ஓடியதால் துப்பாக்கியால் வெங்கடேசனை நோக்கி சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்ததில் தவறி விழுந்தார். இருப்பினும் மீண்டும் ஒரு காலுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அவரை பிடிக்கும் போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்கினார்  இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதை யடுத்து போலீஸ் சவுமியா பாதுகாப்புக்காக வெங்கடேஷ் மீது மற்றொரு ரவுண்டு சுட்டார் .இதில் அவரது மற்றொரு காலில் குண்டு பாய்ந்தது இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டு சரிந்து விழுந்த வெங்கடேசை போலீசார் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வெங்கடேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலையாளியை துப்பாக்கால் சுட்டு பிடித்த பெண் போலீஸ் அதிகாரி சவுமியாவை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்..