அரசு வேலை வாங்கி தருவதாக கோவை வியாபாரியிடம் மோசடி..!

கோவை காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52) இவர் அங்கு புத்தக கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சிங்காநல்லூரை சேர்ந்த பிவிப்ராஜா ( வயது 60) என்பவர் அடிக்கடி வருவார். அதனால் அவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தனது தம்பி மகனுக்கு வால்பாறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி அவரிடம் ரூ 3 லட்சத்து 54 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. மோசடி செய்து விட்டார் .இது குறித்து ஆறுமுகம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிலிப் ராஜாவை தேடி வருகிறார்கள்.