மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கோவை போலீஸ் நிலையம் முன் வாலிபர் தர்ணா..!

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 29)கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஹர்ஷினி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனைவி ஹர்ஷினி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல  மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போதும் மனைவி ஹர்ஷினி மற்றும் குழந்தைகளை கார்த்திக்குடன் அனுப்பி வைக்க அவர்கள் மறுத்ததாக தெரிகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .இந்த நிலையில் தனது மனைவியின் கழுத்தில் கடந்த தாலியை கழட்டிய கார்த்திக் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் முன் அமர்ந்து நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் .அதை அவர் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார். கார்த்திக் அவரது மனைவி மாமனார், மாமியார் ,ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..