கட்டிப்பிடித்தபடி கோவை ரயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை..

கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் ரெயில்வே கேட் அருகே நேற்று இரவு தண்டவாளத்தை ஒட்டி இளம்பெண்ணும் ,ஒரு வாலிபரும் கட்டிப்பிடித்தபடி பிணமாக கிடந்தனர்.இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தவர்கள் சூலூரைச் சேர்ந்த அஜய் ( வயது 19 )என்பதும். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும், அந்தப் பெண் சூலூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த 16 வயது மாணவி என்பதும் தெரியவந்தது. இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்களாம். அதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று இரவு 9 மணி அளவில் ராசி பாளையம் ரெயில்வே கேட் அருகே இருவரும் கட்டிப்பிடித்தபடி ரெயில் முன்பாய்ந்துதற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்