மது குடிப்பதை நிறுத்த முடியாததால் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம் கருவூலூரான் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 44) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதிலிருந்து விடுபடுவதற்காக மது அருந்துவோர் மறுவாழ்வு மையத்தில் 4மாதம் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்தார் .வீட்டுக்கு வந்த பிறகு அவரால் மதுவை நிறுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ஜோசப் ராஜ் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ,இது குறித்து அவரது மனைவி ரேவதி சூலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..